RSS
Write some words about you and your blog here

தொல்காப்பியம் களவு -கற்பு

இன்ப வாழ்வின் இருவேறு நிலைகள்

அகத்துறையில் காதல் இன்பத்தைத் துய்ப்பதில் களவு,கற்பு என்ற இருவேறு நிலைகள் உள்ளன.

களவு
பிணி,மூப்புகளின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய்
உருவும் திருவும் பருவமும் குணமும் குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமை உடையவராய்
தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும்
அடுப்பவுமின்றி ஊழ்வகையால் தாமே எதிர்பட்டுக் கூடுவது.
தமது மகள் பிறருக்கு உரியவள் என்று இருமுதுகுரவரால் (பெற்றோர்கள்) கொடைஎதிர்தார்க்குரிய தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவரும் சுரந்த உள்ளத்தோது எதிர்பட்டு புணர்தல் களவு எனப்பெயர் பெற்றது.
இக்களவு அன்போடு புணர்ந்ததாளின்
காமக்கூட்டம் என்றும் வழங்கப்பெறும்.
இன்னும் இதனை மறைந்த ஒழுக்கம்,மறை,அருமறை என்ற
சொற்களாலும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.