RSS
Write some words about you and your blog here
Showing posts with label தொல்காப்பியம்-அன்பின் ஐந்திணை. Show all posts
Showing posts with label தொல்காப்பியம்-அன்பின் ஐந்திணை. Show all posts

தொல்காப்பியம்-அன்பின் ஐந்திணை


தொல்காப்பியம் தமிழர் வாழ்வின் பல்துறைப்பற்றி அறிவதற்குத் துணைப்புரிகின்றது.தமிழ்மொழி ஒன்றின் கண்ணே காணப்படுவது அகம் புறம் என்னும் இருதிணைகளாகும்.
அகம் என்பது ஒருமித்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறக்கின்ற பேரின்பமாகும்.அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் நுகர்ந்த இன்பம் இவ்வாறு இருந்தது எனக்கூறப் படாததாய் யாண்டும் உள்ளது உணர்வாய் மட்டுமே நிற்கும் .
இத்தகைய காதல்உணர்வே அகப்பொருள் என அழைக்கப்பட்டது.
அகப்பொருளை ஏழுதிணைகளாகப் பிரிக்கின்றனர்.
அவை கைக்கிளை,குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,பெருந்திணை ஆகியன .

  • கைக்கிளை என்பது ஒருதலை காதல்.
  • பெருந்திணை என்பது தகாத காதல் அல்லது பொருந்தா காதல் .
  • இடையிலுள்ள ஐந்தும் உள்ளம் ஒன்றுபட்ட காதலர்களிடையே நிகழும் காதல் ஒழுக்கமாகும்.
ஆதலால் அவற்றை அன்பின் ஐந்திணை என்று அழைப்பர் .